பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை மற்றும் திருவண்ணாமலை இடையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை மற்றும் வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயங்கும் மின்சார ரயில் சேவை புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் திருவண்ணாமலை வரை நீட்டித்து இயக்கப்படும்.

சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை ஆறு மணிக்கு புறப்படும் இந்த மின்சார சிறப்பு முறையில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதனைப் போலவே மறுமார்க்கமாக இந்த ரயில் திருவண்ணாமலையிலிருந்து நாளை அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது