தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.