தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்காக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 7ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் அனைத்து கல்வி சான்றிதழ், ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.