தமிழக அரசு சார்பாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்துடன் தமிழ்நாடு அஞ்சல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தத்தின்படி தமிழக முழுவதும் உள்ள 162 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படும் ஓட்டுனர் உரிமம் இனி விரைவு தபால் மூலமாக விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பப்படும்.

அப்படி வரும்போது வீட்டில் ஆள் இல்லாமல் இருந்தால் விரைவு தபால் சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தில் ஏழு நாட்கள் வரை இருக்கும் எனவும் விண்ணப்பதாரர் அஞ்சலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அப்படி பெறாமல் இருந்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அது திருப்பி அனுப்பப்படும். மேலும் தபால் வருவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இது குறித்து ஏதாவது புகார் இருந்தால் www.indiapost.gov.in இணையதளம் Twitter@indiapostoffice என்ற ட்விட்டர் தளத்திலும், 18002666868 என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.