மக்களவைத் தேர்தலில் 3ஆவது இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியாக இருக்கிறாராம். வெற்றி, வாக்குச் சதவிகிதம் என்கிற இலக்குகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, இதனை மனதில் வைத்து வேலைகளைச் செய்யுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாராம். பாஜக 3ஆவது இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருக்கும் தொகுதிகளில் அவர் தனி கவனம் செலுத்தி வருகிறாராம்.