சென்னையில் தனியார் பேருந்துகள் இயங்கினாலும் மாணவர்களுக்கான இலவசபஸ்பாஸ் திட்டம் பாதிக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் உறுதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் மாநகரப் பேருந்து இயக்கப்படும் என்பது தவறான புரிதல் என இதுகுறித்து பேட்டியளித்த அவர், “இது தொடர்பான நடைமுறைக்கு அரசாணை வெளியிட்டது அதிமுக அரசுதான். தனியார் பேருந்துகளை இயக்கலாமா என ஆய்வு மேற்கொள்ள ஆலோசகரை தேர்வு செய்யவே டெண்டர் விடப்பட்டது.

ஆலோசகர்களின் அறிவுரை அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படும். வதந்திகளை நம்பவேண்டாம்” என கூறினார். மக்கள் தொகை பெருகி வருவதால், கூடுதலான பேருந்துகளை இயக்கவே தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகள் இயங்கினாலும் மாணவர்களுக்கான இலவசபஸ்பாஸ் திட்டம் பாதிக்கப்படாது.  அரசு பேருந்துகளைப் போலவே தனியார் பேருந்துகளும் இயங்கும் என்றார்.