தமிழக பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நேற்று தமிழக பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் விலகியதையடுத்து, தற்போது மற்றொரு முக்கிய நிர்வாகியும் விலகியுள்ளது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவிலிருந்து விலகிய நிர்மல்குமார் நேற்று மாநில தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்

பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் ரீதியாக தொடர் அடிகள் விழுந்து வருகின்றன. அவர் பொறுப்பேற்றது முதல் பல இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். உதாரணமாக காயத்ரி ரகுராம், சிடிஆர் நிர்மல் ஆகிய முக்கிய தலைவர்கள் விலகியிருப்பது பாஜகவுக்கும், அண்ணாமலைக்கும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.