இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புது விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையில் இருக்கும். பொதுவாகவே வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளில் நாய் என்பது நன்றியுள்ள ஜீவனாக உள்ளது. பல இடங்களில் தன்னை விட்டு மேல் உலகத்திற்குச் சென்ற எஜமான் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பில் பல மாதங்களாக நாய்கள் காத்திருப்பதை அடிக்கடி நாம் பார்த்திருப்போம்.

தனது நன்றியுணர்வை அடிக்கடி வெளிப்படுத்தி வரும் நாய் புத்திசாலித்தனமாக சில இடங்களில் செயல்படுகின்றது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் தனது சாப்பாட்டை சாப்பிட்ட சேவலுக்கு நாய் தக்க பதிலடி கொடுத்துள்ளது. அதுவும் எந்த ஒரு கோபமும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொடுத்த பதிலடி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.