சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது வெளியாக்கியுள்ள ஒரு வீடியோவில் கொடூர புலியை தன்னுடைய கைக்குள் வைத்திருக்கும் ஒரு சிறுவனின் வீடியோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சிறுவன் ஒருவன் புலியை சங்கிலியால் கட்டி அதை தன் கையில் வைத்து வாக்கிங் கூட்டிக்கொண்டு போகும் வீடியோ வைரலாகி வருகிறது. ஐந்து வயது கொண்ட சிறுவன் நன்கு வளர்ந்த கொடூர புலியுடன் இருப்பது போல அந்த வீடியோ தொடங்கும் நிலையில் அந்த புலியின் கழுத்தை இரும்பு சங்கிலி ஒன்றால் கட்டப்பட்டுள்ளது. அந்த சங்கிலியின் முனையை சிறுவன் பிடித்துக்கொண்டு புலிக்கு அருகிலேயே நடக்கும் காட்சி வெளியாகி உள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nouman Hassan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nouman.hassan1)