பொதுவாகவே ரயில் தண்டபாளத்திற்கு அருகே பயணிகள் செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதே சமயம் ரயில்வே போலீஸ் காவலுக்கு நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களையும் தாண்டி சில நேரங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. அதிலும் சிலர் எதார்த்தமாக செய்யும் செயல் உயிருக்கே ஆபத்தில் சென்று முடிகிறது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் இரண்டு இளைஞர்கள் தண்டவாளத்திற்கு அருகே சென்று கை கழுவி உள்ளனர். அப்போது வேகமாக வந்த ரயில் ஒன்று இளைஞர் ஒருவரை தூக்கி வீசி உள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.