நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID(Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.  ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனால் மக்களே நகை வாங்கும் போது மேற்கண்ட அடையாளம் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த அடையாளம் தங்கத்தின் தூய்மை மற்றும் உண்மைத் தன்மையை கண்டறிய கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கையிருப்பு நகைகளை விற்பனை செய்யும் வரை பழைய ஹால்மார்க் நடைமுறை நீட்டிக்க நகை கடை உரிமையாளர்கள் அவகாசம் கூறினர். இதனைத் தொடர்ந்து பழைய ஹால்மார்க் நடைமுறைக்கான கால அவகாசத்தை ஜூன் 30-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. போடி நகை விற்பனையை தடுக்க புதிய ஹால்மார்க் நடைமுறையை கொண்டுவரப்பட்டது.