உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்படும் மேரியின் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான டோக்-1 மேக்ஸ் எனும் இருமல் மருந்தை சாப்பிட்ட 18 குழந்தைகள் இறந்ததாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. மேலும் மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலின் வகைகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் ஆய்வு குழு மேரியன் பயோ டெக் நிறுவனம் தயாரிக்கும் டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் எனும் இரண்டு இருமல் மருந்துகளையும் பரிசோதித்தது.

இதில் இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலின் கிளைகள் ரசாயனம் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் இரண்டு மருந்துகளும் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏற்றது அல்ல என அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவில் 66 குழந்தைகள்  உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இதற்கு அரியானா மாநிலம் சோனிபட் மெய்டன் மருத்துவ நிறுவனத்தில் சர்ச்சை கூறிய விதமாக தயாரிக்கப்பட்ட மோசமடைந்த நான்கு இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. அதேபோல் அந்த அமைப்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளின் பயன்பாட்டை கைவிடுமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொண்டது. உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உலக அளவில் இந்திய மருந்துகளின் நற்பெயர் மீதான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.