சீனாவில் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அந்நாட்டின் கிராமப்புறங்களில் கொரோனா பரவல் மிகவும் வேகமாக மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் சூழ்நிலையில் கிராமப்புற மருத்துவமனைகளுக்கு போதிய மருந்துகள் கிடைக்காததால் அவை மூடப்பட்டுள்ளதாகவும் நடுத்தர நகரங்களுக்கு மக்கள் சிகிச்சைக்கு சென்றாலும் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மறுபுறம் முதியவர்களுக்கு கொரோனா அதிகமாக பாதிக்கும் நிலையில் அவர்கள் சிகிச்சை கிடைக்காமல் மன அழுத்தம் அடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.