தைவானை ஒரு சீனப் பிரதேசமாக கருதுவது மட்டுமல்லாமல் தேவை ஏற்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி தைவனை சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் சீனா தயாராக இருக்கிறது. இந்நிலையில் தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சில காலமாக தைவான் உடன் நட்பு பாராட்டி வருகிறது. நட்பு உறவை வலுப்படுத்தும் விதமாக அந்த நாடுகள் தங்களின் பிரதிநிதிகளை தைவானுக்கு அனுப்பியுள்ளது. இது சீனாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் ஆக இருந்த நான்சி பெலோசி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு சென்றுள்ளார்.

இதனால் சீனா தைவானை சுற்றி வளைத்து மிகப்பெரிய போர் பயிற்சி நடத்தியது. இந்நிலையில் அமெரிக்காவை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் லூதியானா நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தைவான் சென்றுள்ளது. இதுகுறித்து சீனாவின் தைவான் வெளி விவகார அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, தைவான் விவகாரத்தில் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பது மற்றும் தைவான் சுதந்திரத்திற்கான சதிகளை அடித்து நொறுக்குவதில் சீனா தற்போதும் உறுதியாக இருக்கிறது. சீனாவுக்கு எதிராக தீங்கிழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில நாடுகள் தைவானுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் அந்த நாடுகள் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.