கன்னியாகுமரியில் உள்ள நான்கு வழிச்சாலை பகுதி அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் இளைஞர்கள் அடிக்கடி காணாமல் போய் உள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து அவர்கள் மீண்டும் வந்திருக்கின்றனர். குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் இதுபோன்ற மாயமாவதும், பின்னர் வருவதுமாக இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த பகுதியில் இரவு நடந்து வந்து கொண்டிருந்த வட மாநில இளைஞர் ஒருவரை ஆறடி உயரமுள்ள மனிதர் ஒருவர் வழிமறித்து அந்த இளைஞரை அலேக்காக தூக்கி தன்னுடைய பைக்கில் வலுக்கட்டாயமாக உட்கார வைக்கிறார் அந்த ஆசாமி.

இவரைப் பார்த்து பயந்து போன அந்த இளைஞர் என்னை விட்டு விடு என்று இந்தியில் கத்து கதறுகிறார். ஆனால் விடாமல் அந்த இளைஞரை கடுமையாக தாக்கிப் பைக்கில் அமர வைத்துக் கொண்டு செல்ல முயல்கிறார். அப்போது அந்த இளைஞர் அதிகமாக சத்தமிட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அங்கிருந்த கார் ஓட்டுனர் ஒருவர் இந்த சம்பவங்களை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் சில வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதும் வடமாநில இளைஞர்களை கடத்திச் சென்று அவர்களை பலாத்காரம் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்த ஆசாமியை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.