ஈரோடு மாவட்டத்தில் உள்ள விளக்கேத்தி புது அண்ணா மலைபாளையத்தில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இரவு பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் முன்பாக பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.

அப்போது பக்தர் ஒருவர் ஒரு எலுமிச்சம் பழத்தை ரூ.21,000-க்கு ஏலம் எடுத்துள்ளார். மேலும் சாமியின் நெற்றியில் வைக்கப்பட்ட 10 கிராம் வெள்ளி காசை 27 ஆயிரம் ரூபாய்க்கும், மற்றொருவர் சாமி கையில் அணிவிக்கப்பட்டிருந்த 15 கிராம் எடையுள்ள வெள்ளி மோதிரத்தை 32 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுத்தார்.