திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் தொண்டு நிறுவன உதவி இயக்குனர் விஜயா குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்துள்ளார். இதில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் லெனின், டாக்டர் லாவண்யா ஆகியோர் முட்டு வலி மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கியுள்ளனர்.

இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். இந்நிலையில் இதய நோய் ரத்த அழுத்தம் உள்ளவர்களை கண்டறிந்து மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாக்கியராஜ் ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, சரண்யா, பிரியா, சரவணன், சக்தி பிரியா, சந்தோஷ் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் செயலாளர்  புவனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.