நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீரணம்பாளையத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 வயதுடைய ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 9- ஆம் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 1 வயது ஆண் குழந்தை டேபிள் மின்விசிறியின் வயரைப் பிடித்து இழுத்ததாக தெரிகிறது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தது.

குழந்தையின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த பெற்றோர் குழந்தையை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 16-ஆம் தேதி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.