திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது வாலிபருக்கும் எனக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எனது கணவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்ததும் அவர் அமெரிக்காவிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் எனது மாமனார் எனக்கு பாலியல் தொந்தரவு அளிக்கிறார். இதுகுறித்து கூறியபோதும் மாமியார் கண்டு கொள்ளவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் இளம்பெண்ணின் மாமனார், மாமியார் ஆகிய இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.