நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோர பகுதியில் இருக்கும் பலா மரத்தில் சீசனை முன்னிட்டு ஏராளமான பழங்கள் காய்த்து தொங்குகிறது. இதனை ருசிப்பதற்காக யானைகள் வருகிறது. தற்போது குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ரயில் தண்டவாள பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.

நேற்று குன்னூர் அருகே இருக்கும் நஞ்சப்பா சத்திரம் கிராமப் பகுதியில் குட்டி உட்பட 3 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.