மதுரை மாவட்டத்தில் உள்ள வைகை வடகரை பகுதியில் விஜயராகவன்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணை கேலி, கிண்டல் செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அந்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தார்.

இதனை அறிந்த விஜயராகவன் அங்கு சென்று இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விஜயராகவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.