கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோரனப்பள்ளி காளி கோவில் அருகே சாலையோரம் 40 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அந்த நபர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.