ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்காக புதிய நலவாரியம் அமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே, முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். அதன்படி, இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு சாரா கிக் (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென தனி நலவாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.