இந்தியாவில் ஜேஎன்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.இந்தியாவை பொறுத்தவரை தற்போது கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 170 ஆக உள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் உருளையன் பேட்டை பகுதியை சேர்ந்த 55 வயது நபர் கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளார் என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு தெரிவித்துள்ளார்.