கோவை சரகர் காவல்துறை டிஐஜி யாக பணியாற்றி வந்த விஜயகுமார் நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் டிஐஜி விஜயகுமார் இறுதி சடங்கின் போது காவலர்கள் வானத்தை நோக்கி 21 குண்டுகள் முழங்க துப்பாக்கிச் சூடு நடத்தி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து முதல் கட்ட விசாரணை நடத்தினர். அதில் டிஐஜி விஜயகுமார் கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் அவருக்கு ஓசிடி (obsessive clean disorder) இருந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.