தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்து விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது..

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆணையிட்டுள்ளார்.
பிறவி குறைபாடு, வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை உள்ளிட்டவற்றிற்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

தேசிய சுகாதார இயக்கம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயின்று வரும் மாணவர்களின் உடல்நலம் குறித்த தகவல்களை அந்தந்த பள்ளிகளில் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது..