வெளிநாடு செல்போனுக்கு புதிய இணையதளம் மற்றும் செயலி தொடங்கப்பட உள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதிக அளவில் மக்கள் வெளிநாடு செல்வதாக கூறியவர் இந்த மாவட்டங்களில் பயண புத்தாக்க பயிற்சி ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் சிக்கி தவித்த பலரை மீட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியிலும் வெளிநாடு செல்வோர் மத்தியிலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.