தமிழகத்தில் உரிய காரணங்களுடன் விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுமுறை வழங்க வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற அனைத்து வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் காவலர்களுக்கு மன அழுத்தம் போக்கும் புத்துணர்வு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். நேற்று டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் காவல்துறையில் பல மாற்றங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.