உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் பயங்கர விபத்து நடந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர். தற்போது போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்த முழு விவரம் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் உ.பி.யில் டிராக்டர் குளத்தில் பாய்ந்து 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.