தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கிரஹ லட்சுமி திட்டத்தை செயல்படுத்த தயாராகி உள்ளது. இதன் ஒரு பகுதியாக 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் திட்டத்தை அரசு நாளை தொடங்குகிறது. ஆனால் மாநிலத்தில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில் அரசு நிர்வாகத்தில் விண்ணப்பித்த 40 லட்சம் பேரை மட்டுமே தகுதியானவர்களாக தேர்வு செய்துள்ளது. இதனால் மற்றவர்கள் கவலை அடைந்துள்ளனர். இரண்டாம் கட்ட தகுதி சரிபார்ப்பு பணியை விரைவில் மேற்கொள்வதற்கும் பொது நிர்வாகம் ஆலோசித்து வருகின்றது.