டயர் வெடித்து டெம்போ மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் தாவணகரேயில் நடந்த விபத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். புனே மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 48 இல் படகாயிலிருந்து தம்முரிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இரவில் ஏற்பட்டது.