தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்கள் இருக்கவே இருக்காது என்பதை தன்னால் உத்திரவாதமாக சொல்ல முடியும் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். கோவை சிறுதானிய உணவு திருவிழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், மற்ற இடங்களில் போலி மதுபானங்கள் விற்கப்பட்டாலும் அது தொடர்பாக காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலி மதுபான விற்பனையால் டாஸ்மாக் மது விற்பனை பாதிக்கப்படாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.