பழனி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படுவதில்லை என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணையில் பதிலளித்த தமிழக அறநிலையத்துறை, தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் பிரசாதத்திற்கு ரசீது வழங்குகிறோம். பழனியிலும் பின்பற்றுகிறோம் என்று கூறியது. விசாரணைக்கு பிறகு அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.