தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரமான சம்பவம், அங்குள்ள பெண்களின் பாதுகாப்பை மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாக்கியுள்ளது. சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் மிக மோசமான முறையில் பாலியல் தொல்லை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

மேலும் அந்தப் பெண் “அவர்கள் என்னைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்கள்” என்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் மிகுந்த மனவேதனையுடன் பகிர்ந்துள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு பொது இடத்தில், அதுவும் பகல் நேரத்தில் தைரியமாக நடந்த இந்த அநாகரிகச் செயல் டெல்லி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனால் நாட்டின் தலைநகரிலேயே பெண்களுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல்கள் தொடர்வது, பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களை இன்னும் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.