தமிழகத்தில் குடிமகன்கள் காலையிலே கடையை திறக்க கோரிக்கை வைக்கிறார்கள் என்று கூறப்பட்டது. மேலும் டெட்ரா பேக்குகளில் கட்டிங்க் விற்பனை செய்வதையே குடிமகன்கள் விரும்புகிறார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கூறியிருந்த நிலையில் தான் அவ்வாறு சொல்லவில்லை என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில், அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் கே.ராஜு, டாஸ்மாக்கில் மினி குவாட்டர் கொடுக்க உள்ளார்கள். இது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கூலித் தொழிலாளர்கள், கட்டுமான பணியாளர்கள் காலையில் குடித்துவிட்டு வேலைக்கு சென்றால், அவர்கள் குடும்பத்திற்கு உத்தரவாதம் கொடுப்பது யார்?. அரசின் செயல் மன வேதனையாக இருக்கிறது” என கூறியுள்ளார்.