பாகிஸ்தானில் லர்கானாவை சேர்ந்த அமீர் அலி என்பவரின் குடும்பத்தினர் அனைவரும் ஒரே திகதியில் பிறந்ததற்காக அந்த குடும்பம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த அற்புதமான கதையை கிண்ண உலக சாதனை புத்தகம் தற்போது பகிர்ந்து உள்ளது. பாகிஸ்தானில் தர்கானாவை பூர்வீகமாகக் கொண்ட அமீர் அலி குடும்பம் அவரது மனைவி குதேஜா மற்றும் ஏழு குழந்தைகளை கொண்டது. ஏழு குழந்தைகளின் நான்கு பேர் இரட்டையர்கள்.

அனைவருமே 19 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள். இதில் தற்செயலாக அனைவரின் பிறந்த நாளும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆகும். அதே சமயம் அந்த தம்பதியின் திருமண நாளும் ஆகஸ்ட் 1ஆம் தேதி என்பது மற்றொரு ஆச்சரியமாகும். இந்த சாதனை உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் தற்போது இடம் பெற்றுள்ளது