நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களை பார்க்க தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. குடியரசு தின விழா மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடப்பதால் பாதுகாப்பு காரணங்களால் தலைவர்களின் நினைவிடங்கள் இன்று மற்றும் நாளை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.