ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி உள்ளிட்ட விஷயங்களில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் கமல்ஹாசன். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மநீம நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இளங்கோவன் வெற்றிக்காக நானும், எனது கட்சியினரும் உறுதுணையாக இருப்போம். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் செயற்குழுவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.