ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் நேற்று இஸ்ரேலிய படையினருக்கும்  பாலஸ்தீனியர்களுக்கும் மோதல்  நடைபெற்றுள்ளது. இந்த மோதலில் இஸ்ரேலிய படையினரால் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இஸ்ரேலிய படையினரால் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தங்கள் தரப்பில் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை என இஸ்ரேலிய படைகள் கூறியுள்ளது. இந்நிலையில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதாக கூறப்படுவதை இஸ்ரேலிய படைகள் மறுத்துள்ளது. மேலும் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

இது குறித்து பாலஸ்தீனிய செஞ்சிலுவை சங்கம் கூறியதாவது, பலர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவ பணியாளர்கள் ஜெனின் முகாமிற்கு வருவதை இஸ்ரேலிய படைகள் சாத்தியமற்றதாகி உள்ளனர் என கூறியுள்ளது. மேலும் கண்ணீர் புகை குண்டுகளை இஸ்லாமிய படைகள் வீசியதில் உள்ளூர் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக ரத்தம் சிந்துவது தொடர்ந்து நடைபெறுவதால் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என ஐ.நா மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு பாலஸ்தீன அதிகார சபையின் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.