செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கிய ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வானிலை கண்காணிப்புக்கு ஜி 20 செயற்கைக்கோள் பயன்படுத்த முன்மொழிந்தார். இது தெற்கு அரைக்கோள நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்திரயான் 3 திட்ட பணியில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஏவப்படும் ஜி-20 செயற்கைக்கோள் மனித குலத்திற்கு பயனளிக்கும் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.