நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதில் பாரத் என மாற்று மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜார்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன், மோடி அண்ணாவை பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன். சென்னை மாநிலம் என்ற இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது சரியா, தவறா? மாற்றியது சரி என்றால் இந்தியாவை பாரத் என்று மாற்றுவதும் சரிதான் என தெரிவித்துள்ளார்.