ஜிபிஎஸ் மூலமாக சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநிலங்கள் அவையில் பேசியவர், வாகனத்தின் பதிவு எண் பலகைகளை தானாக அங்கீகரிக்கும் கேமராக்களை பொருத்துவதன் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை குறித்து இரண்டு சோதனை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.