திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் தற்போது மிகவும் டிரெண்டாகி வருகிறது. திருமண ஜோடிகள் பலரும் வித்தியாச வித்தியாசமான தீம்களில் போட்டோஷூட் எடுக்கின்றனர். அந்தவகையில் சமீபத்தில், இளம் ஜோடிக்கு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பாம்பு ஒன்று வந்துள்ளது.

தம்பதி இருவரும் தண்ணீரில் அமர்ந்துகொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென பாம்பு வந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத அப்பெண் பயத்தில் அலறினார். அவளுடைய வருங்கால கணவர் அப்பெண்ணுக்கு தைரியம் கொடுத்து தேற்றினார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.