தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் வணிகர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய டிசம்பர் 27ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி வணிகவரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக இருந்த நிலையில் மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி படிவத்தை டிசம்பர் 27ஆம் தேதி வரை தாக்கல் செய்ய தாமத கட்டணம், வட்டி செலுத்த தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.