தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. வரலாறு காணாத கனமழையால் பள்ளிகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை முடிவதற்கு முன்பு சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று முதல் அதிகாரிகள் பணிகளை தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.