தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் உள்ள கடன்களை செலுத்த சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை தவணைத் தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் என்றும் கடன் வழங்கிய நாளிலிருந்து ஒப்பந்த நாள் முடிய அசலுக்கு ஒன்பது சதவீதம் வட்டி மட்டும் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் 4,73,067 பேருக்கு கூடுதல் வட்டி தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.