தமிழகம் முழுவதும் 1021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் எம்ஆர்பி மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேதமடைந்த மருத்துவமனை கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிய கொரோனா தொற்று குறித்த அச்சம் வேண்டாம். இதுவரை ஒருவருக்கு கூட பரவவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.