தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது எனவும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நடப்பு கல்வி ஆண்டுக்கான வினாத்தாள் தொகுப்பு புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர், மழையால் பாதித்த பகுதிகளில் மாணவ மாணவிகளின் பாடப்புத்தகங்கள் சேத மதிப்பீடு நடைபெற்ற வருகிறது என்று கூறினார். அதோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு விரைவில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.