கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு கால கட்டத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு அவர்களுக்கான தண்டனை விவரங்கள் வெளியாக உள்ளது. இதனால் நீதிமன்றத்தில் ஆஜராக இருவரும் தேசியக்கொடி அகற்றப்பட்ட காரில் கிளம்பியுள்ளனர்.