இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதேபோன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த நிலையில் இப்போட்டியை காணவந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த்(25) என்பவர் காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அரவிந்த் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல் இன்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் காளை முட்டியதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாடு முட்டியதில் உயிரிழந்த அரவிந்த் ராஜ் மற்றும் அரவிந்த் இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் 3 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.